கோப்பையில் அடங்கிய காப்பியே
குன்றா அமுதமே!
தலக்கத் தலைக்க உன்னை என்முன் வைத்து
கண்மூடின் கற்பனைகள்
கபகபவென பொங்குவதேன்?
கசப்பும் தித்திப்பும் கலந்த என்
கருமணியே! கன்டாங்கிச் சேலைபோல
உன்மேல் படியும் ஆடையும் ஓர் தனி ருசி.
ஆசையைத்தூண்டும் நீ
எனக்குப் புகட்டிய பாடங்கள் பல.
வாசனை பரப்பும் உன் அணுப்பொருள்கட்கு
உயிர் கொடுத்து, உண்ணுவோமா என
பறக்கும் என் மனம்-
அதைத் துறந்தும் இருப்போம் என
மாறி மாறி சிந்திக்கிறது
ஆகமொத்தம் என் தியானத்தை
கலைக்க வல்ல நீ
அதை ஆக்கவும் வல்லமை கொண்ட
திடமேவும் ஆனந்த தாகம்;
தியானப் பிரயாணத்தில் என்னுடன்
கைசேர்ந்து நடக்கும் ச்னேகம்.
Saturday, July 7, 2007
Sunday, July 1, 2007
திருக்குறளும் தெளிதீபமும்
தகழி ஒன்று கிடைத்து
தங்கு எண்ணெய்விட்டு வைத்தேன்
திறை தாண்டி காண்போமென
திட்டமிட்டு திரி சமைத்தேன்
பார்வையில் சிக்கி முக்கும்
பலப்பல காட்சிகள்
பரிசித்துப் பார்ப்பதற்கு
படியுமென விளக்கெறித்தேன்
தீயினை ஏற்றியதும்
தெரிந்தது கோடிரூபம்
தேர்ந்தெடுக்க வல்லேன்
திருக்குறளைக் கேட்டேன்
அகத்தின் ஆழத்தையும்
புரத்தின் பொலிவினையும்
முதல் இடை கடை என்று
மூதறிஞர் வகுத்து வைத்தார்
குரள்தனை புரட்டினேன்
கூர்மைநிறை ஞானம் சேர்
அரம்பொருள் இன்பமென
ஆயிரம் பாடல் கேட்டேன்
நல்லதொரு வெண் பாவில்
நவின்றன பலமொழிகள்
தேர்ந்தெடுக்கத் திட்டமில்லாது்
திகைத்துப் போய் நின்றேன்
தெளிந்தன ஐய்யம் பல
தெளியாத புதிராய் சில
பன்மையில் ஒருமை கண்டு
பைய பற்று உற்றேன்.
உள்ளு வெளி யுலகு சேர்ந்து
உறு திரியும் இவ்வுலகில்
திருக்குறளும் தெளிதீபமும்
தேர்ந்தமனமும் வேண்டுவனே.
தங்கு எண்ணெய்விட்டு வைத்தேன்
திறை தாண்டி காண்போமென
திட்டமிட்டு திரி சமைத்தேன்
பார்வையில் சிக்கி முக்கும்
பலப்பல காட்சிகள்
பரிசித்துப் பார்ப்பதற்கு
படியுமென விளக்கெறித்தேன்
தீயினை ஏற்றியதும்
தெரிந்தது கோடிரூபம்
தேர்ந்தெடுக்க வல்லேன்
திருக்குறளைக் கேட்டேன்
அகத்தின் ஆழத்தையும்
புரத்தின் பொலிவினையும்
முதல் இடை கடை என்று
மூதறிஞர் வகுத்து வைத்தார்
குரள்தனை புரட்டினேன்
கூர்மைநிறை ஞானம் சேர்
அரம்பொருள் இன்பமென
ஆயிரம் பாடல் கேட்டேன்
நல்லதொரு வெண் பாவில்
நவின்றன பலமொழிகள்
தேர்ந்தெடுக்கத் திட்டமில்லாது்
திகைத்துப் போய் நின்றேன்
தெளிந்தன ஐய்யம் பல
தெளியாத புதிராய் சில
பன்மையில் ஒருமை கண்டு
பைய பற்று உற்றேன்.
உள்ளு வெளி யுலகு சேர்ந்து
உறு திரியும் இவ்வுலகில்
திருக்குறளும் தெளிதீபமும்
தேர்ந்தமனமும் வேண்டுவனே.
Friday, June 29, 2007
நிர்வாணம்
தன்மையில்லா மனம்
வெட்கம் இல்லை வெளிவேஷம் இல்லை.
நடைமுறையில் நடக்காத காரியம் இன்னிலை.
மார்க்கத்துடன் மனம் ஒன்றுசேர்வதனால்
உள்ள, இல்லாப் பொருள்கள்
உயிர்பெற்று தலைதரித்து ஆடுகின்றன.
பயண, பாதை இரண்டும் நாம் வகுத்தனவை.
நமது அகத்தினால் உருவாக்கப்பட்ட
ஜாலம் நிறைந்த தன்மையற்ற
காற்றுக் கட்டிடங்கள்.
செய்வதற்கோர் தொழிலை நாடி
சிந்தனைக்கு கவிதை கோரி
வேதனக்கு விதிக்கும் பல
ழூதனக் கருவிகள் சமைத்து
நிழல்போன்ற அக்கருவிகளை நிஜமாக நம்பி
அவற்றுள் ஒன்று கலந்து மகிழ்ந்து வருந்தி
நடத்தும் பித்தலாட்டத்தை விடுவது-
கட்டிய கயிலியை உதரித் தள்ளி
விட்ட மேனிக்கு வியப்பொன்றும் இல்லாது
அப்படியே பிறந்த அந்த அலங்கோலத்துக்கு
சமம் நிர்வாணம்.
வெட்கம் இல்லை வெளிவேஷம் இல்லை.
நடைமுறையில் நடக்காத காரியம் இன்னிலை.
மார்க்கத்துடன் மனம் ஒன்றுசேர்வதனால்
உள்ள, இல்லாப் பொருள்கள்
உயிர்பெற்று தலைதரித்து ஆடுகின்றன.
பயண, பாதை இரண்டும் நாம் வகுத்தனவை.
நமது அகத்தினால் உருவாக்கப்பட்ட
ஜாலம் நிறைந்த தன்மையற்ற
காற்றுக் கட்டிடங்கள்.
செய்வதற்கோர் தொழிலை நாடி
சிந்தனைக்கு கவிதை கோரி
வேதனக்கு விதிக்கும் பல
ழூதனக் கருவிகள் சமைத்து
நிழல்போன்ற அக்கருவிகளை நிஜமாக நம்பி
அவற்றுள் ஒன்று கலந்து மகிழ்ந்து வருந்தி
நடத்தும் பித்தலாட்டத்தை விடுவது-
கட்டிய கயிலியை உதரித் தள்ளி
விட்ட மேனிக்கு வியப்பொன்றும் இல்லாது
அப்படியே பிறந்த அந்த அலங்கோலத்துக்கு
சமம் நிர்வாணம்.
வேட்டையாட்டம்
இருக்கும் நிம்மதியை விட்டுவிட்டு
இல்லாததை தேடுகிறேன்.
இதன்பேர்தான் வேட்டை.
குழப்பம் இல்லத நிலை அடையுமின்
உயிர் உடலில் தங்குவதில்லை- ஆக
வேட்டையின் விளைவு இதுவா
இல்லை வீஇண் பலியா? என்ற கேள்விக்கு பதில்
வேடனைக் கேட்டால் ஒன்று; விலங்கினை கேட்டால்?
கண்கட்டி வாய்போத்தி செவிகளை உள்செலுத்துமின்
நினைவில் வரும் தங்கமான்
நான் என்னும் சுயநினைவில் விளையும்
நல்லதொறு விந்தைப் பொருள்.
உயிரைக் கொல்வதனால் வேடனும்
தன்னுயிரின் ஓர் பங்கினை இழக்கின்றான்.
உயிரில்லா இயற்பொருளுக்கு
உணர்வளிக்கும் வல்ல மன விலங்கின்
கற்பனையாம் தங்க முட்டைகளை
இழக்க மறுக்கின்றேன்; இந்த மறுப்பே
மனிதயியல்பு போலும்.
நான் இறைவனோடு இணைய விரும்பவில்லை
இப்படிக்கு்,
வேடன், விலங்கு, வேட்டை.
இல்லாததை தேடுகிறேன்.
இதன்பேர்தான் வேட்டை.
குழப்பம் இல்லத நிலை அடையுமின்
உயிர் உடலில் தங்குவதில்லை- ஆக
வேட்டையின் விளைவு இதுவா
இல்லை வீஇண் பலியா? என்ற கேள்விக்கு பதில்
வேடனைக் கேட்டால் ஒன்று; விலங்கினை கேட்டால்?
கண்கட்டி வாய்போத்தி செவிகளை உள்செலுத்துமின்
நினைவில் வரும் தங்கமான்
நான் என்னும் சுயநினைவில் விளையும்
நல்லதொறு விந்தைப் பொருள்.
உயிரைக் கொல்வதனால் வேடனும்
தன்னுயிரின் ஓர் பங்கினை இழக்கின்றான்.
உயிரில்லா இயற்பொருளுக்கு
உணர்வளிக்கும் வல்ல மன விலங்கின்
கற்பனையாம் தங்க முட்டைகளை
இழக்க மறுக்கின்றேன்; இந்த மறுப்பே
மனிதயியல்பு போலும்.
நான் இறைவனோடு இணைய விரும்பவில்லை
இப்படிக்கு்,
வேடன், விலங்கு, வேட்டை.
மனத்தொழில் நமது
மனத்தொழில் கடினம்,
கால்மணி நேரத்தில் ஒரு சிறிய ஓசையை
ஒலிக்குமாறு கேட்டதற்கு
கிடைத்ததென்னவோ சம்மந்தமில்லாத
சிலுசிலுப்பு.
நடப்பது என்னவென்று கவணித்தால்
எண்ண வெள்ளத்தில் ஒன்று கலந்தது.
ஒன்றும் நடக்கவில்லை என்பது
ஏமாற்றோ என்னவோ.
ஆகமொத்தம் கைவசம் இருக்கும்
காரியம் கடிணம்!
கண்ணை மூடியதும் காட்சிகள் ஏராளம்.
காதைப் பொத்தின் கலகலப்பு, கோஷமயம்.
இல்லாத புலங்களில் தொல்லை இல்லாத கணமில்லை.
செய்வதெண்று எடுத்துக் கொண்டால்
சிய்து முடிக்கவேண்டும்
கடனோ பலனோ, இத்தொழில் நமதாயிற்று.
கால்மணி நேரத்தில் ஒரு சிறிய ஓசையை
ஒலிக்குமாறு கேட்டதற்கு
கிடைத்ததென்னவோ சம்மந்தமில்லாத
சிலுசிலுப்பு.
நடப்பது என்னவென்று கவணித்தால்
எண்ண வெள்ளத்தில் ஒன்று கலந்தது.
ஒன்றும் நடக்கவில்லை என்பது
ஏமாற்றோ என்னவோ.
ஆகமொத்தம் கைவசம் இருக்கும்
காரியம் கடிணம்!
கண்ணை மூடியதும் காட்சிகள் ஏராளம்.
காதைப் பொத்தின் கலகலப்பு, கோஷமயம்.
இல்லாத புலங்களில் தொல்லை இல்லாத கணமில்லை.
செய்வதெண்று எடுத்துக் கொண்டால்
சிய்து முடிக்கவேண்டும்
கடனோ பலனோ, இத்தொழில் நமதாயிற்று.
சுதந்திர தாகம்
சுதந்திரம்- இந்த வார்த்தைக்குத் தான்
பொருள் ஏராளம்.
தேசங்கள் அடிமைப்பட்டன, பிறகு
விடுதலை பெற்றன.
நிரம், குணம், பிறந்த குலம் என்றென்று
காரணங்களைக் குவித்து
கருத்தினை நிராகரித்து
கோடானு கோடி மக்கள் ஒருத்தரை யொருவர்
அடிமைப் படுத்தி அல்லல் கொடுத்து
அராஜகம் புறிந்தது ஒரு பக்கம்.
மறுபக்கமோ மனதின் கடிவாளங்கள்.
இதுதான் இன்பம் இதுதான் வாழ்க்கை
என்றென்று கர்ப்பனைகளில்
தன்னைத் தானே பூட்டிவிட்டு,
நடந்து முடிந்த சம்பவங்களின் தன்மையின்மையை
சட்டமாக சமைத்து விதிகளை வகுத்து,
நிகழாத எதிர்பார்ப்புகளை யாகத்தில்
நெய்யாம் ஆசைகளினால் மூட்டி
சுதந்திரம் என்னும் சுலபமான சுயநிலையினை
சுட்டுப் பொசுக்கி சூத்திரத்தில் தன்னைத்தானே
ஆட்டிவைக்கும் அடிமைத்தனம்- என்று தணியும்?
பொருள் ஏராளம்.
தேசங்கள் அடிமைப்பட்டன, பிறகு
விடுதலை பெற்றன.
நிரம், குணம், பிறந்த குலம் என்றென்று
காரணங்களைக் குவித்து
கருத்தினை நிராகரித்து
கோடானு கோடி மக்கள் ஒருத்தரை யொருவர்
அடிமைப் படுத்தி அல்லல் கொடுத்து
அராஜகம் புறிந்தது ஒரு பக்கம்.
மறுபக்கமோ மனதின் கடிவாளங்கள்.
இதுதான் இன்பம் இதுதான் வாழ்க்கை
என்றென்று கர்ப்பனைகளில்
தன்னைத் தானே பூட்டிவிட்டு,
நடந்து முடிந்த சம்பவங்களின் தன்மையின்மையை
சட்டமாக சமைத்து விதிகளை வகுத்து,
நிகழாத எதிர்பார்ப்புகளை யாகத்தில்
நெய்யாம் ஆசைகளினால் மூட்டி
சுதந்திரம் என்னும் சுலபமான சுயநிலையினை
சுட்டுப் பொசுக்கி சூத்திரத்தில் தன்னைத்தானே
ஆட்டிவைக்கும் அடிமைத்தனம்- என்று தணியும்?
கலங்கும் மனம்
கண்மூடின் - நூறு லோகங்கள்
சகித்துக் கொண்டேந் ஏனெனின் இவை
தடுமாறும் என் சித்தத்தின் சிதரல்கள்.
ஓர்மனது என்னும் விந்தை லோகத்தின்
சிற்றரசாங்கங்கள்- சேர்ந்திருக்க
தவிக்கும் பெருங்காவியத்தின் சுவடுகள்.
கண்விழித்தேன் - கோடானுகோடி லோகங்கள்.
காண்போர் சிரிஷ்டித்தனவை இவை
கலைப் பொருள்கள், கருவிகள்
ஏதும் தனித்து நிற்கும் இயல்பின்றி,
ஒன்றி சமரசம் காணவும் வழியின்றி
தவித்து இயங்கின.
ஆக பல்லாயிறங்கோடி லோகங்களை
ஆக்கி அழித்து மீட்டி இழந்த
நான் என்னும் ஓர் கருத்தா
தன்னைத் தானே உயர்த்தித் தாழ்த்தி
தன் படைப்புகளோடு ஒன்றிப் பிறிந்து
கடைசியில் உருவின்றி காற்றோடு காற்றாக ...
சொல்ல வந்த அந்த ஒரு சொல்லைச்
சொல்வதற்குமுன் கலந்திற்று.
சகித்துக் கொண்டேந் ஏனெனின் இவை
தடுமாறும் என் சித்தத்தின் சிதரல்கள்.
ஓர்மனது என்னும் விந்தை லோகத்தின்
சிற்றரசாங்கங்கள்- சேர்ந்திருக்க
தவிக்கும் பெருங்காவியத்தின் சுவடுகள்.
கண்விழித்தேன் - கோடானுகோடி லோகங்கள்.
காண்போர் சிரிஷ்டித்தனவை இவை
கலைப் பொருள்கள், கருவிகள்
ஏதும் தனித்து நிற்கும் இயல்பின்றி,
ஒன்றி சமரசம் காணவும் வழியின்றி
தவித்து இயங்கின.
ஆக பல்லாயிறங்கோடி லோகங்களை
ஆக்கி அழித்து மீட்டி இழந்த
நான் என்னும் ஓர் கருத்தா
தன்னைத் தானே உயர்த்தித் தாழ்த்தி
தன் படைப்புகளோடு ஒன்றிப் பிறிந்து
கடைசியில் உருவின்றி காற்றோடு காற்றாக ...
சொல்ல வந்த அந்த ஒரு சொல்லைச்
சொல்வதற்குமுன் கலந்திற்று.
Subscribe to:
Comments (Atom)